மலேசியாவில் தேடுதல் வேட்டை : ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது (Photo)
மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள புட்டடான் பகுதியில் மலேசிய குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆள் நடமாட்டமில்லாத இரண்டு கட்டிடங்களில் நடத்தப்பட்ட ஆபரேஷன் புட பெர்ஸெப்படு எனும் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சாபா குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் தெரிவித்துள்ளார்.
“முதலில் குடிவரவுத்துறையினரால் ஆவணங்கள் பரிசோதனைக்காக 124 பேர் சுற்றி
வளைக்கப்பட்டனர். அதில் 32 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் அவர்கள்
கைது செய்யப்பட்டனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட 32 புலம்பெயர்ந்தவர்களில் 14 பேர் ஆண்கள், 11 பெண்கள்,
7 பேர் குழந்தைகளாவர்.
“இவர்களை குடிவரவுத்துறையின் தடுப்பு மையத்திற்கு அனுப்புவதற்காக இவர்களுக்கு
கோவிட் தொற்று இல்லை என்பதை அறிய கோவிட் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என
குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் கூறியுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam