எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்: இராணுவத்தினரின் மனிதாபிமான செயல்(Photo)
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருப்போருக்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் இராணுவத்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதனூடாக மக்களுக்கு தொடர்ந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் தட்டுபாடு

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில்
காத்திருக்கின்றனர்.
வெயில் காலம்

தற்போது கடுமையான வெயில் காலமாக இருப்பதால் வரிசையில் காத்திருப்பவர்கள் தாகத்துடனையே அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரிசையில் காத்திருப்போருக்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கியை வைத்துள்ளனர்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு |
| மக்களுக்கான எரிபொருள் விற்பனையை நிறுத்தி உலக சாதனை படைத்த இலங்கை |
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri