மீண்டும் ராஜபக்சர்கள் மீண்டெழுவார்கள் - நாடாளுமன்றத்தில் முழக்கம்
தீர்மானமிக்க காலப்பகுதி ஒன்று இல்லாவிட்டாலும் ராஜபக்சர்களுடன் மீண்டெழுந்து வருவோம் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். எனக்கு பக்கத்து ஆசனத்தில் இருந்த நாமல், அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
ஆனால் இன்னும் சிலர் ராஜபக்சர்களை கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். நள்ளிரவில் கூட கண்விழித்து ராஜபக்ஷ ராஜபக்ஷ என்று கனவில் கூட கூச்சலிடுகின்றார்கள்.
ஆனால், ஊஞ்சல் முன் பக்கம் சென்றால் பின்பக்கமும் வரும். நாம் அன்றும் இன்றும் நாளையும் நாங்கள் ராஜபக்ஷர்களுடன் இருக்கிறோம்.
திகதியும் இல்லை, நேரமும் இல்லை, மீண்டும் எழுவோம் என்று மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam