இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 400,000 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வெளிநாடு செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்பது விசேட அம்சமாகும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் அடுத்த 60 நாட்களுக்கு திகதிகளும் நேரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
யாராவது வேலைக்காக அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அதை உறுதி செய்ய வாட்ஸ்அப் மூலம் 0706311711 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri