வீடுகள், சொத்துக்கள் அழிப்பு:கேட்க நாதியில்லை:முன்னாள் அமைச்சர்கள் கவலை
நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.
அவர்கள் இவ்வாறான பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், ஜனாதிபதியோ முன்னாள் பிரதமரோ, கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவோ நிலைமை என்ன என்பது தொடர்பான தேடி அறியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அசௌகரியத்தில் இருப்பதாகவும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமை பற்றி அறிவிக்கக் கூடிய எந்த பொறுப்புவாய்ந்த நபர்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், அவர்களில் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருப்பதாக பேசப்படுகிறது.
தாம் எப்படி,எங்கு இருக்கின்றோம் என்பது சம்பந்தமான எவரும் தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்காது குறித்து பலர் வெறுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam