அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டு : நால்வர் பலி
அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்று (1) மாலை 5 மணியளவில் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள எலும்பியல் பகுதிக்குள் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் எனவும் எவருக்கும் எந்த காயமும் உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனவும் துல்சா பொலிஸ்துறையின் ரிச்சர்ட் மியூலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் உலக செய்திகளை இக் காணொளியில் காணலாம்.