அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - CCTV குறித்து வெளியான தகவல்
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம் அடங்கிய பணப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளன.
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை நபரொருவர் கொள்ளையடித்து தப்பியோடியிருந்தார்.
இந்த திருட்டு சம்பவம் நேற்று (03) பிற்பகல் சுமார் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
சந்தேகநபர் கைது
இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய ஹொரணை தலைமையக பொலிஸ் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

பொலிஸ் விசாரணைகளின் படி, இந்த பணம் மில்லனியா, மொரகஹேனா, பொக்குனுவிட்ட மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள கிளை வங்கிகளின் ஏடிஎம்களுக்கு எடுத்துச்செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கியின் உதவி மேலாளர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் பணத்தை ஏற்றுவதற்காக, பணப்பைகள் நிரம்பிய இரண்டு பைகளுடன் வங்கியின் பின் வாசல் வழியாக வெளியே வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரி அவருடன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரி வங்கிக்குள் ஒரு புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.
CCTV குறித்து வெளியான தகவல்
வங்கியின் பின்புறம் நிறுவப்பட்டிருந்த குளிரூட்டும் (ஏ/சி) இயந்திரத்தின் அருகே மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உதவி மேலாளர் காரை நெருங்கியதும் உள்ளே புகுந்து, இரண்டு பணப்பைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பனதுறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷான் டி சில்வா மற்றும் ஹொரணைஉதவி பொலிஸ் கண்காணிப்பாளர் இ.ஏ. ஏகநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில் சிறப்பு பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்திருந்துள்ளது.
தற்போது, பல பொலிஸ் குழுக்கள், வங்கியின் சிசிடிவி காட்சிகளின் மூலம் தலைமறைவான சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த வங்கியின் சுற்றுவட்டாரத்தில், வங்கியைத் தவிர வேறு எந்த சிசிடிவி கமரா அமைப்புகளும் நிறுவப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிபோரும் பொலிஸார்