ஊடகவியலாளர் ச.தவசீலனுக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிப்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடக களப்பணி ஆற்றிவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பண்டாரவன்னியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்றைய தினம் (13.12.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்தவர்களுக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோயன் ஜெயராணியின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் செயலாளருமான நாகலிங்கம் வேதநாயகனும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரனும் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதேவேளை கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் ஆகியோர் கலந்துள்ளனர்.









கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
