ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் அரைஇறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி
கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின்(Hong Kong Sixes International Cricket Tournament) காலிறுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நேபாளம் அணியுடன் இன்று(02.11.2024) இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரில் லஹிரு மதுஷங்க தலைமையிலான 7 வீரர்கள் கொண்ட இலங்கை அணி விளையாடி வருகிறது.
அரை இறுதிப்போட்டி
போட்டியின் டி பிரிவில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
The Lions were on fire as they bowl the Rhinos OUT, registering a 40-run win in the 3rd Quarter Final!💥#HongKong #AsiasWorldCity #Cricket #ItsRainingSixes pic.twitter.com/GIbiQBg4Bq
— Hong Kong Sixes (@HongKongSixes) November 2, 2024
ஏ பிரிவில் தென்னாப்பிரிக்காவும், சி பிரிவில் பாகிஸ்தானும் முன்னிலை வகிக்கிப்பதோடு, அரை இறுதிப்போட்டிக்கு குறித்த இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam