வீடு புகுந்து திருட முற்பட்டவரை நையப்புடைத்த பொதுமக்கள் (Photos)
வவுனியா - பத்தினியார் மகிலங்குளம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (25.06.2023) இடம்பெற்றுள்ளது.
மகிலங்குளம் கிராமத்தில் வீடொன்றுக்குள் குறித்த நபர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
எனினும் சந்தேகநபரை மடக்கிப்பிடித்த மக்கள் அவரை நையப்புடைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
