கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிருணிக்காவின் நிலை
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையின் ஆர் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் ஆடையுடன் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடூழிய சிறைத்தண்டனை
தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேன்முறையீடு
அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிருணிக்காவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
