நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஹிருனிகாவின் நிலைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக ஹிருனிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பதவியை இழந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக தாம் நியமிக்கப்பட்டால் அந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனத்தின் எதிர்ப்பு
எனினும் அந்தப் பதவியை தமக்கு வழங்குமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஊடக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிருனிகாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதற்கு ஊடக நிறுவனமொன்று எதிர்ப்பை வெளியிட்டதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri