ஜனாதிபதி மாளிகை முன் ஹிருணிக்கா கைது! நாடாளுமன்றில் கண்டனம் தெரிவிப்பு
ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளமையானது கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானது என்று ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிருணிக்காவின் போராட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அதன் பின்னர் முகங்களை மறைத்த விசேட படையணி களத்தில் இறக்கப்பட்டு, சுற்றி வளைக்கப்பட்ட ஹிருணிக்கா குழுவினர் கரையோரப் பொலிஸ் நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது குறித்து கண்டனம்
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வைத்து, ஹிருணிக்காவின் கைது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்துகின்றமை போன்ற விடயங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு முரணானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri
