வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

Sri Lanka Police Vavuniya Hinduism Northern Province of Sri Lanka
By DiasA Mar 07, 2024 10:24 PM GMT
Report

புதிய இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆலயத்தின் செயலாளர் தமிழ்செல்வன் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''வெடுக்குநாறி ஆலயத்தில் பூஜைகளுக்காக சென்றபோது பூசகர் உள்ளிட்ட சிலரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸார் மறித்து ''பூஜைகளுக்கு மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டாம்" என கட்டளையிட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

பொலிஸார் அச்சுறுத்தல் 

அதன்படி ஆலய பூஜை ஒழுங்குகளுக்கு சென்றபோது அவர்கள் பயணித்த தண்ணீர் கொள்கலன் வாகனமானது பழுதடைந்துள்ளது.

அதனை சரி செய்ய 15 நிமிடங்கள் சென்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸாரில் இருவர் பூசகர் உள்ளிட்ட குழுவினரிடம் வருகைத்தந்து ''ஆலயத்திற்கு செல்லவேண்டாம். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்தவுடன் அவரின் அனுமதியோடு செல்லுங்கள்'' என உத்தரவிட்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி | Hindu Priest Arrested In Vavuniya

நான் உள்ளிட்ட எங்களது குழுவினர் உளவு இயந்திரம் ஊடாக ஆலயத்திற்கு முன்னதாக சென்றுவிட்டோம். இதன்போது பின்னால் வருகைதந்த பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 5 பேரை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது அடையாள அட்டையை பிடுங்கி முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் ஆலய பூசகரை இழுத்து சென்று வண்டியில் ஏற்றியுள்ளார். இதன்போது ஆலயத்தில் இருப்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு ஏனைய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூட எமது வழிபாட்டுரிமை தொடர்பில் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த அடாவடித்தனமான செயற்பாடானது கண்டிக்கத்தக்கது. எமது வழிபாட்டுரிமையை பாதுகாக்க ஒழுங்கு செய்ததன்படி பூஜைகள் நடைபெறவேண்டும்.

மேலும் கைதுசெய்யப்பட்ட ஆலய பூசகர் உட்பட எமது நிர்வாகத்தினர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளையத்தினம் இடம்பெறும் பூஜைகளில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.'' என்றார்

இரண்டாம் இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த கைது தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

முதலாம் இணைப்பு

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா உட்பட இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

அதேவேளை, விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி | Hindu Priest Arrested In Vavuniya

பறிக்கப்பட்ட பொருட்கள்

அத்துடன், ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளன.

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு

திருக்கோணேஸ்வரம் சிவராத்திரி நிகழ்வு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு


குடிநீரை இழக்கத் தயாரில்லை : அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த தோட்ட மக்கள்

குடிநீரை இழக்கத் தயாரில்லை : அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த தோட்ட மக்கள்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US