கோவிட் காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக அதிகபட்ச உயிரிழப்பு பதிவு
அவுஸ்திரேலியாவில் கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில், 98 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
கோவிட் பரவத்தொடங்கிய கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படும் முதல் அதிகபட்ச உயிரிழப்பு இது என கூறப்படுகின்றது.
இதில் 39 பேர் விக்டோரியா மாநிலத்திலும், 35 பேர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும், 18 பேர் குவின்ஸ்லாந்த் மாநிலத்திலும், 5 பேர் தெற்கு அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் 88 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததே
அவுஸ்திரேலியாவின் அதிகபட்ச கோவிட் உயிரிழப்பாக இருந்தது.