அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கையை வந்தடைந்தது
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றில் இந்தப் பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.
நெருக்கடி நிலை
இலங்கையில் தற்பொழுது எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து கலந்தாலோசனை செய்யும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் ராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29ம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழுவில் உள்ளவர்கள்
ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் கெப்ரோன், தென், மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான பிரதி துணை ராஜாங்கச் செயலாளர் கெலி கிடர்லின் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு காத்திரமான முறையில் உதவிகளை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri