கொழும்பில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் கொழும்பு நாரஹேன்பிட்டியில் ஒருவரை படுகொலை செய்து மேலும் சிலரை காயப்படுத்தியமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி அதித்ய பட்டபந்திகே இந்த தண்டனையை விதித்துள்ளார்.
வழக்கு விசாரணை
மஞ்சுள மகேஸ் ஜயதிலக்க என்ற நபரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மரண வீடொன்றில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை காலப் பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேர் மரணித்துள்ளனர்.
வழக்கு விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட காரணத்தினால், ஏனைய ஆறு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
