ஹேஷா விதானகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஓய்வுபெற்ற சட்டத்தரணி அஜித் பிரசன்னவை அலரி மாளிகைக்கு முன்பாகத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (21) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இறந்துவிட்டதாக நீதிமன்றத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
இதன்படி 2019 நவம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த திகதிகளில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஓய்வுபெற்ற மேஜர் வழக்கறிஞர் அஜித் பிரசன்னாவைத் தாக்கியதாகக் கூறி, கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஹேஷா விதானகே நீதிமன்றத்தில் முன்னிலையானார், அதே நேரத்தில் வழக்குத் தொடர்ந்த ஓய்வுபெற்ற சட்டத்தரணி அஜித் பிரசன்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதன்படி பிரதிவாதியின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, சாட்சியங்களை முன்வைத்து, பிரதிவாதியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு கோரினர்.
அரசு தரப்பு சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு இரண்டு முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் கூறினர்.
இதன்படி வழக்கைத் தொடர்வதில் அரசு தரப்புக்கு எந்த ஆர்வமும் இல்லை, மேலும் பிரதிவாதியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
