கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐந்து பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
இண்டிகோ விமானம்
அவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்ததை தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் இருந்த மாசிடோனிய விசாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாடு கடத்தல்
விசாக்கள் மேலதிக விசாரணைக்காக எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், விசாக்கள் போலியானவை என்பது தெரியவந்தது.
சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரை மேலும் விசாரித்ததில், அவர்கள் நாட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசிடோனியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.
நாட்டிற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் சந்தேக நபர்கள், நாடு கடத்தலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
