சுதந்திரபுரம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளித்தல் நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் 23.11.2025 நேற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள யூதா ஆலயத்திற்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு சுதந்திரபுரம் சந்தியில் உள்ள நிறோஜன் விளையாட்டு கழக மைதானத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் நிகழ்வுகள் நடைபெற்றன.
கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மக்களின் ஒத்துளைப்புடன் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மாவீரர் நினைவான பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர்கள் ஏற்றா மாவீரர்கள் பொதுப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பந்தலில் வைக்கப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்


