இலங்கையில் மீட்கப்பட்டுள்ள பல்லாயிர கணக்கான கண்ணிவெடிகள்
இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனமானது கடந்த இருபது வருடங்களில் 270000 மிதிவெடிகள் மற்றும் ஒரு மில்லியன் வரையாான வெடிபொருட்கள் என்பவற்றை அகற்றியுள்ளதக ஹலோட்ரஸ்ட் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டை நேற்றுமுன் தினம் (24-11-2022) நிறைவு செய்துள்ளது.
இதனையொட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அந் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் 20ஆம் ஆண்டை கடந்துள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணி
ஹலோவானது இலங்கையில் மிகப்பெரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகும்.
இதில் 1300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் நாற்பது வீதமானோர் பெண்கள் ஆவர்.
மனிதவலு முறை கண்ணிவெடி அகற்றும் அணிகள், கருவிகள் மற்றும் கவசமிடப்பட்ட இயந்திரங்கள் போன்றவற்றை கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பயன்படுத்துகின்றது.
ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனம்
ஹலோவின் அணிகள் கடுமையாக உழைத்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை அகற்றி மக்கள் பாதுகாப்பாக அவர்களின் இடங்களுக்கு திரும்பவும் அவர்களது நிலங்களில் விவசாயம் செய்யவும் வழிவகுத்து வருகின்றது.
20 ஆண்டுகளில் ஹலோவின் நடவடிக்கை மூலம் 114 km2 நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இது 6700 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமனாகும்270 000 மிதிவெடிகள் மற்றும் கிட்டத தட்ட ஒரு மில்லியன் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 280 000 மக்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்துள்ளது என தெரிவித்துள்ளர்.
இந்நிலையில் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் தன்னார்வ தொண்டு நிறுவனமானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் 239143 சதுரமீட்டர் பரப்பளவில் இருந்து 34649 வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாட்டுகளின் நிதியுதவியுடன் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது ஈடுபட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.