மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கனரக வாகனம், அதிகாலை 5.00 மணியளவில் கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் 92ஆம் கட்டைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.
விபத்து நேரத்தில் ஓட்டுநர் ஒருவரே வாகனத்தில் இருந்ததாகவும், தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் விளைவாக தொலைத்தொடர்பு வயர்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
