நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்(Photos)
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திரக் கோளாறு

இதேவேளை சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயந்திரக் கோளாறு காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் வீட்டுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

பொலன்னறுவையிலிருந்து வெலிமடை, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கும் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam