மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கன மழை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 123.3 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், மட்டக்களப்பின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
வான் கதவுகள் திறப்பு
தொடரும் கன மழையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகின்றது.

மேலும், பிரதேசத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri