வட இந்தியாவை தாக்கும் வெப்ப அலை : ஒரு வாரத்தில் 200 பேர் பலி
வட இந்தியாவை தாக்கும் வெப்ப அலை, கடந்த வாரத்தில் மாத்திரம் புதுடில்லியில் கிட்டத்தட்ட 200 வீடற்ற மக்கள் பலியானதாக வீடற்றவர்களுக்கு உதவும் ஒரு தன்னார்வக் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களில் 52 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு மடங்கு அதிகமான வெப்பம்
அவர்களில் பெரும்பாலோர் திறந்த வெளியில் வேலை செய்யும் ஏழைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கமான வெப்ப அலையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வெப்பம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அலுவலகம் தகவல்படி, புதுடில்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்றைய இரவு நேர வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பரன்ஹீட்) ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam