செம்மணி அகழ்வில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்.! ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் மீட்பு..
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று(2) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் இலக்கமிடப்பட்டுள்ளன.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
அவற்றில் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 260 என இலக்கமிடப்பட்ட குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், 259 என இலக்கமிடப்பட்ட சிறுவர் ஒருவருடைய எலும்புக்கூட்டுத் தொகுதியும் சில சென்டிமீற்றர்கள் தொலைவில் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், நேற்றைய அகழ்வாய்வின் போது இரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றன் மீது ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதியின் மண்டையோடானது, மற்றைய எலும்புக்கூட்டுத் தொகுதியின் கால் பகுதிக்கு மேல் தனியாகக் காணப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நீதிமன்றப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அகழ்வாராய்ச்சிக் குழியில் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் குவியல்களாகவும் நேற்றுத் தென்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி
அவை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டுத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அது தொடர்பான துல்லியமான விவரங்களைக் கூற முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் கழுத்துப் பகுதியிலிருந்து செப்பினால் செய்யப்பட்டது என நம்பப்படுகின்ற 'தாயக்கூடு' (தாயக்கட்டு) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வழக்கின் 101ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பகுளிலிருந்தும், இதுவரை மொத்தமாக 270 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 266 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நீதிமன்ற உத்தரவாதத்துடன் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan