பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்! - அரசாங்கம் உத்தரவு
பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஊடக அமைச்சரும், இணை அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “புத்தாண்டு காரணமாக ஏராளமான மக்கள் கடைகளுக்கு வருகிறார்கள்,
இதனால் கோவிட் தொற்றுநோய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும் நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்,
இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த அறிவுறுத்தல்கள் சுகாதாரத் துறை, பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.