ஒரு பில்லியன் டொலர் கடன்! ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ய இந்தியா நிபந்தனை
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாக மாற்ற மத்திய வங்கி தீர்மானித்திருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட்டுவந்த 10 ரூபாவை 38 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே டொலர் ஒன்றுக்காகச் செலுத்தப்படும் 230 ரூபா என்பது மேற்குறிப்பிட்ட 38 ரூபா ஊக்குவிப்புத்தொகையையும் உள்ளடக்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 200 ரூபா என்ற மட்டத்தில் பேணுவதால் நாட்டிற்கு எவ்வித நன்மையும் கிட்டப்போவதில்லை.
மாறாக வெளிநாடுகளில் பணிபுரிவோர் நாட்டிற்கு அனுப்பும் பணம் அனுப்பும் வீதம் குறைவடையும் என்று கூறினோம். அதுமாத்திரமன்றி உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் அதன்மூலம் பெற்ற வருமானத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டு வைத்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறு டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 200 ரூபாவாகப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைக்குப் பொருத்தமற்ற செயற்பாடுகளின் விளைவாக கடந்த 6 மாத காலத்தில் சுமார் ஒன்றரை பில்லியன் ரூபா நட்டமேற்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவாக மாற்ற மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது.
அதேவேளை வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு, ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக வழங்கப்பட்டுவந்த 10 ரூபாவை 38 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே டொலர் ஒன்றுக்காகச் செலுத்தப்படும் 230 ரூபா என்பது மேற்குறிப்பிட்ட 38 ரூபா ஊக்குவிப்புத்தொகையையும் உள்ளடக்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாட்டுச்சந்தை செயற்பாடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கல்கள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இவ்விடயத்தில் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கடந்தகாலத்திலிருந்து நாம் தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றோம்.
இருப்பினும் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை. இப்போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பசில் ராஜபக்ஷ தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.
அதன்போது இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்க வேண்டுமானால், ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
எனவே எமது நாட்டு ரூபாவின் பெறுமதியை ஜெய்சங்கரே தீர்மானிக்கின்றார்.
ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
