சொகுசு வாகன இறக்குமதிக்காக 3.7 பில்லியன் ரூபாவை செலவிடவிருந்த அரசாங்கம்!ஹர்ஷ டி சில்வா
ஆடம்பர எஸ்யூவிகளை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்போகும் பணத்தில் இருந்து 400 அவசர நோயாளர் காவு வாகனங்களை அரசாங்கத்தால் கொள்வனவு செய்ய முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குவதற்கு அரசாங்கம் 3.7 பில்லியன் ரூபாவை செலவிடவிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியது போல் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை ரத்து செய்திருந்தால் அரசாங்கம் பெரும் தொகையை மிச்சப்படுத்தியிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அதற்கு பதிலாக நோயாளர் காவு அவசர வாகனங்கள் (அம்புலன்ஸ்களுக்காக )
3.7பில்லியனை செலுத்தியிருந்தால் சுமார் 400 அம்புலன்ஸ்களை கொள்வனவு
செய்திருக்க முடியும் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri