மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!
தரமற்ற நிலக்கரி மோசடியால் அதிகரிக்கும் மின் உற்பத்திச் செலவும் திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் கொள்ளையினால் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பாரிய இழப்பு மக்கள் மீதே அநியாயமாக சுமத்தப்படுகின்றது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது குறித்து ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும். அனைத்தையும் மத்திய கிழக்கு யுத்தத்தின் பால் விட்டுவிட முடியாது.
பேச்சுவார்த்தை மட்டத்திலுள்ள செல்வாக்கு
பொருளாதாரத்தை விரிவுப்படுத்தும் தொலைநோக்கு பார்வை இல்லாத அரசாங்கம் இறுதியில் அனைத்து சுமைகளையும் IMF இன் தாளத்திற்கு ஆடிக்கொண்டு மக்கள் மீதே சுமத்துவது வருந்தத்தக்கது.
நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செய்ய வேண்டியிருப்பது நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மட்டத்தில் செல்வாக்கு செலுத்த முடியாத ஒரு அரசாங்கம் இருப்பதனாலாகும்.
நாடு மீண்டும் பானையிலிருந்து அடுப்பில் விழுந்த ஒரு பாதையில் பயணிக்கிறது. இதனை நாம் எவ்வகையிலும் எதிர்பார்த்த ஒன்று அல்ல.
தற்போது எரிபொருளுக்கும் மின்சாரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து மானியங்களையும் செப்டம்பர் இறுதிக்குள் அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் ரூபாய் முடியும் போது இரத்துச் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மக்களுக்கு அதிகரிக்க போகும் பாரிய சுமை
இப்போது நிலைமை இப்படித்தான் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்திய 100 பில்லியன் ரூபாயில் எரிபொருளுக்கு 57 பில்லியன் ரூபாயும் மின்சாரத்திற்கு 15 பில்லியன் ரூபாயும் மட்டுமே உள்ளது.
மற்றவை உரம் மற்றும் 'அஸ்வசும' போன்றவற்றுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளன. எனவே இப்போது கூட ஒரு வகையில் இந்த மானியங்கள் முடிவடைந்து வருகின்றன.
அதனால் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்படும் போதும் சில வேளைகளில் ஓரளவுக்கு இது அதிகரிக்கலாம்.

ஆனால் இது இதைவிட அதிகமாக உயரும். ஏனெனில் மிக அதிக விலைக்கே எரிபொருளைப் கொள்வனவு செய்கின்றனர்.
தரமற்ற நிலக்கரியினால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவு குறைவாக உள்ளதால் அதற்குப் பதிலாக எரிபொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை மிக உயர்ந்த விலைக்கு கொள்வனவு செயவதாலும் எரிபொருளுக்கான மானியமும் நீக்கப்படுகின்றதென்றால் மக்கள் மீது மீண்டும் ஒருமுறை பாரிய சுமை சுமத்தப்படுவது நிச்சயம்.
அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அநுரவுக்கு எந்தவிதத்திலும் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... Cineulagam