டொனால்ட் ட்ரம்பை கண்டித்துள்ள இளவரசர் ஹாரி!
ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகள் முன்னரங்கு நிலைகளில் பணியாற்றவில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை இளவரசர் ஹாரியும் கண்டித்துள்ளார்.
"2001-ஆம் ஆண்டில், நேட்டோ (Nato) தனது வரலாற்றிலேயே முதல் முறையாகவும்—ஒரே முறையாகவும்—உறுப்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு விதியான 'Article 5'-ஐ நடைமுறைப்படுத்தியது.
ட்ரப்பின் கருத்து
இதன் பொருள், நமது பகிரப்பட்ட பாதுகாப்பைப் பேணுவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்குத் துணையாக நிற்க ஒவ்வொரு நட்பு நாடும் கடமைப்பட்டிருந்தது என்பதாகும். எனவே அந்த அழைப்பிற்கு நட்பு நாடுகள் செவிசாய்த்தன என்று ஹரி குறிப்பிட்டுள்ளார்.

"நான் அங்கு பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுமைக்கும் தொடரக்கூடிய நண்பர்களைப் பெற்றேன்.
எனது நண்பர்களை இழந்தும் இருக்கிறேன். ஐக்கிய இராச்சியம் (UK) மட்டுமே 457 பாதுகாப்புப் படை வீரர்களைப் பலிகொடுத்தது.
இளவரசர் ஹரி
"ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை என்றென்றைக்குமாக மாறிப்போனது. தாய்மார்களும் தந்தையர்களும் தங்கள் மகன்களையும் மகள்களையும் அடக்கம் செய்தனர். குழந்தைகள் பெற்றோர் இன்றித் தவித்தனர்.

அந்தக் குடும்பங்கள் இன்றும் அதன் வலியைச் சுமந்து கொண்டிருக்கின்றன. "அந்தத் தியாகங்கள் உண்மையுடனும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டியவை.
இந்த நிலையில், இராஜதந்திரம் மற்றும் அமைதியைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri