விரைவில் தமது முக்கிய அரசியல் முடிவை வெளியிட தயாராகும் ஹரின் பெர்னாண்டோ
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தாம் எடுக்கவுள்ள முக்கிய அரசியல் முடிவை விரைவில் நாடாளுமன்றத்தில் வைத்து வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விடயத்தை அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், இப்போது தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை வெளிப்படுத்த போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் விரைவில் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக தமது முடிவை
செயல்படுத்தப் போவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.