ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைய இன்று முற்பகல் அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடந்த தினங்களில் வெளிநாட்டில் தங்கியிருந்ததுடன், கடந்த 21ஆம் திகதி நாடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.