ஹரின் பெர்னாண்டோ கறுப்பு சால்வை அணிந்திருக்காததை சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி எம்.பிக்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வை அணிய போவதாக கூறியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பிக்கும் போது கறுப்பு சால்வையை அணிந்திருக்கவில்லை என்பத ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ “ சால்வை நினைவுக்கு வருமா என்று நான் எதிர்பார்த்தேன்.
நான் சால்வையை அருகில் வைத்துக் கொண்டுதான் இருந்தேன்” எனக் கூறியுள்ளார். “சால்வை குறித்து நினைவூட்டியது நல்லது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தான் கறுப்பு சால்வையை அணிய போவதாக இதற்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
காலம் முழுவதும் தமது குடும்ப பலத்தை கட்டுவதற்கு குரக்கன் சால்வை அணிவது போல் அல்ல, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைக்கும் வரை கறுப்பு சால்வை அணிவேன் என அவர் சபையில் குறிப்பிட்டிருந்தார்.