ரணிலின் செய்தியை சுமந்து பேரணிக்கு வந்த ஹரின்..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செய்தியை பேரணிக்கு எடுத்து வந்ததாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பேரணியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ரணில் விக்ரமசிங்க இங்கு இல்லாத போதும் அவரின் ஆசீர்வாதம் எங்களிடம் உள்ளது என்பது அவர் கூறிய செய்தியாகும்.
ரோஹன விஜேவீர
76 வருட சாபம் குறித்து பேசும் நேரத்தை வீண்விரயம் செய்யும் தற்போதைய அரசாங்கம் பற்றியே நான் பேச வந்தேன். நாட்டை ஏமாற்றிய கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ரில்வின் சில்வாவின் கூற்றை நான் இப்போது கூற விரும்புகின்றேன்.

76 வருடங்களாக இந்த நாட்டை சீரழித்தது நாம் இல்லை. 1948ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டுவரை இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.
ஆனால், 1965ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியை ஆரம்பித்த ரோஹன விஜேவீரவினாலேயே இந்த நாட்டில் பிரச்சினை ஆர்மபித்தது” எனத் தெரிவித்துள்ளார்.