முட்டை மற்றும் கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, சோள இறக்குமதியின் மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ரூ.25/- ஆக இருந்த முட்டையின் விலை ரூ.20/- ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவையும் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவரான அஜித் எஸ்.குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய ஆபத்து! - சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |



