வவுனியாவில் முன்னாள் போராளி குடும்பத்திற்கு குழாய் கிணறு கையளிப்பு
வவுனியா(Vavuniya) - தவசிகுளத்தில் புலம்பெயர் உறவின் நிதி உதவியில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு முன்னாள் போராளி குடும்பத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (26.04.2024) இடம்பெற்றுள்ளது.
குடிநீர் குழாய் கிணறு
ஜேர்மன் வாழ் தமிழுறவு உதயசாந்தின் 30 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குறித்த குடிநீர் குழாய் கிணறு அமைக்கப்பட்டு உறவுகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளின் நிதி அனுசரணை செயலணியின் மாவட்ட செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன், கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர், பதிப்பாளர் உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.