திருகோணமலையில் நான்கு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு
“சமூகங்களை கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று முன்தினம் (09.08.2024) திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகிய தென்னவன் மரபு அடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது, சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.
உதவித்திட்டம்
திருகோணமலை நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் வசித்து வருகின்ற பொதுமக்கள் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்த பின்னராக போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் தினமும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமது வாழ்க்கையை நடத்திவந்த இந்நிலையில் அம் மக்களுக்கான உதவித்திட்டமாக இது அமைந்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.
மேலும் இதன்போது தென்னைவன் மரபு அடி கிராம உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஏனைய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், குறித்த கிராமத்தினை சேர்ந்த பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.