இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் நூல் கையளிப்பு!
கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.
"ஒரு சிறந்த நாளைக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்" என்னும் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட நூல், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
மொழிபெயர்ப்பு நூல்
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் உதவி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.
இத்தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து நூலினை பெற்றுக்கொண்டார்.

நந்திக்கடல் நீரேந்து பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் : முரணாகும் மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
