ஜே.வி.பி முக்கியஸ்தர்களிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிப்பு(Photo)
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தலைமையிலான அணியினரிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கொள்கை பிரச்சாரத்தை இன்று(8) ஏறாவூரில் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே சுனில் ஹந்துன் நெத்தி தலைமையிலான அணியினரிடம் புனித அல்குர்ஆன் சிங்களப் பிரதி கையளிக்கப்பட்டது.
ஜே.வி.பி.யின் பிரச்சாரம்

ஜே.வி.பி.யின் பிரச்சாரகர்களும் அதன் ஏறாவூர் அமைப்பாளர் முஹம்மது உசனார் கரீம் றஹ்மான் தலைமையிலான அணியினரும் ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது அங்கு வருகை தந்த செயற்பாட்டாளரான இளைஞர் ஜே.ஆர்.ஏ.சஜித் என்பவரால் இந்த சிங்கள அல்குர்ஆன் ஜே. வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
செயற்பாட்டாளரின் கருத்து

இது குறித்து சுனில் ஹந்துன்நெத்தியிடம் கருத்து தெரிவித்த செயற்பாட்டாளரான சஜித் “புனித அல்குர்ஆனையும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களையும் பற்றி மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரங்களால் இஸ்லாமியர்கள் விரோதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.
இந்த நாட்டில் வாழும் சகோதர சமூகங்கள் புனித அல்குர்ஆனையும் முஸ்லிம்களையும்
பற்றிய புரிதல்களை அறிந்திருப்பது இன நல்லிணக்கத்துக்கான சிறந்த வாய்ப்பாக
அமையும், அதனாலேயே தாம் வெறுப்பு பிரச்சாரத்தை நீக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam