சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள் (Photos)
செங்கலடி தளவாய் பகுதியில் இரவு வேளைகளில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கிராம மக்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் (V.Surendran) தெரிவித்துள்ளார்.
தளவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோணாக்கள் கொண்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை நடைபெற்றது.
இதன் போது மணல் அகழ்வில் ஈடுப்பட்ட டிப்பர் மற்றும் கனரக வாகனங்களை பிடித்து மேலதிக நடவடிக்கைக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த தளவாய் பிரதேசமானது அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி திருட்டு இனரீதியாக பல இன்னல்களை கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமான பிரச்சனைகளால் இக்கிராம மக்கள் அரசாங்கத்தினதும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறித்த பகுதிகளை அரசாங்க அதிபர் விசேட குழு கொண்டு அவதானிக்கும் பட்சத்தில் இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
