இலஞ்சம் பெற்ற மாவட்ட பிரதம பொறியியலாளர் கைது
அம்பாந்தோட்டை மாவட்ட பிரதம பொறியியலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் சாரதி ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (05.10.2023) ஹம்பாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (06.10.2023) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து அங்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
