இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி
முஸ்லிம் சகோதரர்களும் இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றி இன்பமுடனும், நலமாகவும் வாழ வாழ்த்துவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் சகோதரர்கள் அல்லாஹ்வின் அருளினால் தியாக பெருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடுகின்றனர்.
'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகப் பெருநாள் இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரிய தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை "ஹஜ்" கடமையாகும்.
அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றி இன்பமுடனும், நலமாகவும் வாழ வாழ்த்துகின்றேன்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நிலவும் கோவிட் வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்நாளில் நாம் அனைவரும் சாந்தி, சமாதானம், சமத்துவத்துடனும் வாழ முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam