குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழி வழக்கில் நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - சட்டத்தரணி விளக்கம்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan Peoples Kalmunai Law and Order
By Rusath Apr 20, 2026 01:58 PM GMT
Report

கடந்த 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

இந்த விசாரணை இன்று(20.04.2026)களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சராக நியமனம் பெற்ற அநுர கருணாதிலக்கவை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

வலுசக்தி அமைச்சராக நியமனம் பெற்ற அநுர கருணாதிலக்கவை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி

குருக்கள்மடம் புதைக்குழி விவகாரம்

இதன்போது வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான இந்த மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (20.04.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழி வழக்கில் நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - சட்டத்தரணி விளக்கம் | Gurukul Monastery Human Remains Case

இந்த வழக்கிலே கடந்த 31.03.2026 ,அன்று இந்த வழக்கினுடைய பிரத்தியசக முறைபாட்டாளர் நீதிமன்றில் நகர்த்தல் பிரேரணை வாயிலாக அணுகி அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களிலே இரண்டு இடங்கள் மாத்திரம் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஒரு இடம் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த குறித்த பிரதேசத்தை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அதனை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்குரிய கட்டளை ஆகுமாறும் நீதிமன்றை வேண்டி இருந்தார்.

அதன் அடிப்படையில், குறித்த அந்த ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்த வழக்கினுடைய பிரத்தியசக முறைப்பாட்டாளர் தனது சொந்த செலவில் இருந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி அந்த ஸ்கேன் பரிசோதனையை ஆடியோ ஃப்ரீக்குவன்சி மெக்கானிக் டெலிவரி எனும் ஸ்கேன் பரிசோதனையை நடைமுறையை பின்பற்றி குறித்த ஸ்கேனிங் செய்யப்படாத பிரதேசத்தை ஸ்கேன்கனிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், அதன் பின்னர் அங்கே ஏதாவது எச்சங்கள் காணப்படுமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று நீதிமன்றில் கட்டளை ஆக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்கேனிங் நடவடிக்கைக்கான திகதி அறிவிப்பு

குறித்த இந்த வழக்கிலே சட்ட வைத்திய அதிகாரி, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தொல்லியல் திணைக்களம், குற்றத்தடுப்பு பிரிவு, என வழக்கோடு தொடர்பற்ற சகல தரத்தவர்களுக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில், அடையாளம் காணப்பட்டு ஸ்கேனிங் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத அந்த பிரதேசத்திலே எதிர்வரும் மே மாதம் 14, 15,16 மற்றும் 17 திகதிகளில் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மற்றும் ஏதாவது எச்சங்கள் இருக்குமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவுள்ளன.

குருக்கள்மடத்தில் மனிதப்புதைகுழி வழக்கில் நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு - சட்டத்தரணி விளக்கம் | Gurukul Monastery Human Remains Case

இந்த வழக்கில், குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் அவரது சொந்த செலவினத்திலேயே மேற்கொள்வதற்கு நீதிமன்று அதற்குரிய கோதாவினை ஆக்கி இருக்கின்றது.

மேலும், வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி அழைக்கப்பட இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.      

புதிய வலுசக்தி அமைச்சர் சற்று முன்னர் நியமனம்..

புதிய வலுசக்தி அமைச்சர் சற்று முன்னர் நியமனம்..

48 மணி நேரத்தில் உச்சம் காணும் வெப்பநிலை - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

48 மணி நேரத்தில் உச்சம் காணும் வெப்பநிலை - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US