தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்! மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி (Video)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது,காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முதலாம் இணைப்பு
அம்பாறை − திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அம்பாறை – திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும்,மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை,பொலிஸ் நிலையம் முற்றுமுழுதாக விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/36b327ad-ff86-4212-a8cb-b9d30729b0a7/21-61c6566496b1f.webp)