அமெரிக்காவில் நத்தார் பேரணியின் மீது வாகனம் மோதச் செய்து தாக்குதல்
அமெரிக்காவில் நத்தார் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மக்கள் மீது மோதியதாக கூறப்படும் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறெனினும், இந்த சந்தேகநபர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் மீது வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியள்ளன.



பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri