சட்ட சிக்கலுக்குள் நந்தன குணதிலக்க மற்றும் கம்மன்பில - தீவிரமடையும் விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நந்தன குணதிலக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், தமது ஆணைக்குழுவிற்கு எதிராக அவமதிப்பு செய்ததாக எழுந்த முறைப்பாட்டை தொடர்ந்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அவர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
லஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமை சக்தி” என்ற சிவில் சமூக அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிய கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கலாம் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குணதிலக்க மற்றும் கம்மன்பில ஆகியோர் தங்கள் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை, ஆதாரங்களுடன் கூடிய மனுக்களை நீதித்துறை சேவை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை விடுத்து, பொதுவில் கூறப்படும் ஆதாரமற்ற கூற்றுக்கள் ஆணையகம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam