மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட முக்கிய காரணம்
மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசாரணையில் வெளியான காரணம்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
சிசிடிவி காட்சி வெளியீடு
அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.