முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
கூழாமுறிப்பு கிராமத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் அவரின் குடும்ப சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கத்திக்குத்தும் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த குடும்பஸ்தர் மீது வீட்டில் வைத்திருந்த இடியன் துப்பாக்கியால் மற்றையவர் சுட்டதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் தப்பி சென்ற நிலையில் காயமடைந்த நபரிடம் இருந்து மாவட்ட மருத்துவமனை பொலிஸார் வாய்முறைப்பாட்டினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை, சம்பவம் குறித்து மேலதிக விசாரணகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
