கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை? வெளியான காணொளி
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பான சி.சி.டி.வி காணொளி வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் காசாளரை அச்சுறுத்துவதை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகின்றன.
இதனிடையே, அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம், கடந்த வாரம் நடந்த கொள்ளை முயற்சியில் அதன் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையத்தில் அதன் உறுப்பினர்கள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக பல்பொருள் அங்காடியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விற்பனை நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது, இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.